🍀சாலைகளுக்குப் பெயர் வைத்து, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் காலம்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். 🍀காந்தி தாத்தா, நேரு மாமா, அன்னை தெரசா, பாரதியார், திருவள்ளுவர், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்களெல்லாம் யார்? அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? ஏன் நாம் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? என்றவாறு கேள்விக் கணைகளை நம் மீதே தொடுப்பார்கள். விளையாட்டு : 🍀குழந்தைகள் ஒன்றைச் சொல்லித்தந்தால் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் பொது அறிவினை வளர்த்துவிடலாம். 🍀இதற்காக அடுக்குமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ராகத்தோடு பாடி சொல்லிக்கொடுக்கும்போதும் குழந்தைகள் மனதில் அப்படியே பதியும். 🍀நம் சுதந்திரத் தியாகிகள், நம் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், அவர்களின் பெயர்களை சொல்லி, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் எடுத்துச்சொல்ல தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைத்துக் கொண்டு விளையாடலாம். விளையாடும் முறை : அதோ பாரு காரு... காருக்குள்ள யாரு... நம்ம மாமா நேரு... நேரு என்னா சொன்னாரு......
Comments
Post a Comment
NEVER EVER GIVE UP