பெட்ரோல் விலை புதிய உச்சம்
சென்னை: பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது.இந்த விலையேற்றம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்து வருகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் எனும் நெருப்பு இன்னும் முழுமையாக அணையாத நிலையில், அதன் மீது விலையேற்றம் என்ற பெயரில் பெட்ரோல் ஊற்ற வேண்டாம் மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Comments
Post a Comment
NEVER EVER GIVE UP